பொதுப்பணித்துறை என்ஜீனியரின் மனைவியிடம் நகை பறிக்க முயற்சி..2 பேருக்கு தர்ம அடி.. கைது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே நடந்து சென்ற கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி சாலை மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவர் பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேரி மெட்டில்டா. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்லூரி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை மேரி மெட்டில்டா அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு புறப்பட்டார். வீட்டில் இருந்து ஆலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மேரி மெட்டில்டா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் மேரி மெட்டில்டா நகையை கெட்டியாக பிடித்ததால் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர்கள் இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

உடனே மேரி மெட்டில்டா திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அவரது அலறல சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து வாலிபர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் பொதுமக்கள் வாலிபர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவரையும் சராமரியாக அடி பின்னி எடுத்தனர்.

இதுபற்றி நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபர்கள் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்ட இருவரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், வாலிபர்கள் இருவரும் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+