3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம்: லக்கானி
சென்னை: 3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இல்லை. அண்டை மாநில எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மதுக்கடைகள் மூடப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி மாநிலத்தில் 17 இடங்களில் அமைக்கப்படும்.
3 நாட்களுக்கு ஒரு முறை செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். வாக்கு எண்ணிக்கை நாளான மே 19ம் தேதி காலை வரை தபால் வாக்குகள் பெறப்படும்.
12ம் தேதி அனைத்து பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications