காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு- ஆட்டோ ஓட்டுனர் தீக்குளிக்க முயற்சி
செங்கோட்டை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து செங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளகூடாது என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், மாணவ அமைப்புக்கள், பொதுநலஅமைப்புக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டம் செங்கோட்டைதாலுகா அலுவலகம் முன்பு அப்பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் என்பவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி தீ வைக்க முயன்றார். இதைக் கண்ட அப்பகுதி பூ வியாபாரிகள் அவரை காப்பாற்றிவிட்டு உடனடியாக செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் குமாரை மீட்டு அறிவுரை கூறி செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 25 நிமிடம் பரப்பரப்பு நிலவியது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications