நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை: உறவினர்கள் மறியல், போலீஸ் தடியடி
திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ டிரைவர் கொலையை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன.

நெல்லை தச்சநல்லூரைச் சேர்ந்தவர் பொன்னையா. ஆட்டோ டிரைவரான இவர், இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விட்டு விட்டு திரும்ப வந்துள்ளார். வண்ணாரபேட்டை அருகே அவர் வந்த போது, அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று பொன்னையாவை சரமாரியாக வெட்டிச்சாய்த்துள்ளது. இதில் பொன்னையா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறியல் பதற்றம்
இதனிடையே ஆட்டோ டிரைவர் கொலையைக் கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதில் ஒரு பேருந்தின் கண்ணாடி நொறுங்கியது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனையடுத்து ஒரு பிரிவினர் ஆட்டோவிற்கு தீவைத்து எரித்தனர். இதனால் எழுந்த பதற்றத்தை அடுத்து வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தொடர் கொலைகள்
நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று மாத காலத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடர்கொலைகளால் சம்பவம் சாதாரண பொதுமக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் புதியதமிழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஸ்ரீவைகுண்டத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்தப்பரபரப்பு அடங்கும் முன்னர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் பட்டப்பகலில் ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications