For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் பாரில் தகராறு ஆட்டோ ஓட்டுனரை பாட்டிலால் குத்திய போலீஸ்காரர்

Google Oneindia Tamil News

ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுனரை போலீஸ்காரர் ஒருவர் பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதகுளம் பகுதியை சார்ந்தவர் சண்முக சுந்தரம். இவர் சுரண்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இன்று ஆலங்குளம் பகுதியிலுள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்கு நெட்டூர் பகுதியை சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்து என்பவரும் இருந்த தாக கூறப்படுகிறது.

auto driver hit by a police man

இதில் இருவருக்குள்ளும் ஏதோ வாய்த்தகராறு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் காவலர் சண்முக சுந்தரம் ஆட்டோ ஓட்டுனர் இசக்கிமுத்துவை மதுப் பாட்டிலால் குத்தியுள்ளார்.

இதில் இசக்கிமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழ்ந்ததாக கூறப்படுகிறது.மேலும் சம்பவத்தில் ஈடுப்பட்ட காவலர் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

English summary
police man hit a auto driver with a bottle for TASMAC problem; police filed case about the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X