ஆட்டோவில் ஏறி தற்கொலைக்கு ஆழமான ஆற்றைத் தேடிய முதிய தம்பதி.. மீட்டார் டிரைவர்
பவானி: நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு முதிய தம்பதி தற்கொலை செய்து கொள்வதற்காக பவானிக்கு வந்துள்ளனர். அங்கு ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்வதற்காக ஆட்டோவில் போயுள்ளனர். ஆனால் அவர்களின் நோக்கத்தை அறிந்த ஆட்டோ டிரைவர் அவர்களிடம் சாதுரியமாக பேசி அவர்களை தற்கொலையிலிருந்து மீட்டுள்ளார்.
நாமக்கல்லைச் சேர்ந்த 85 வயது முதியவரும், அவரது 65 வயது மனைவியும் பவானிக்கு சனிக்கிழமை வந்துள்ளனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினர். பின்னர் வெளியில் வந்த அவர்கள் ஒரு ஆட்டோ பிடித்தனர். அவர்களிடம் பவானி கூடுதறைக்குச் செல்லுமாறு கூறினர்.
டிரைவரும் அங்கு கூட்டிச் சென்றார். அங்கு இறங்கிய முதிய தம்பதி, மக்கள் குளிக்கும் இடத்திற்குப் போனார்கள். ஆனால் அப்போது தண்ணீர் வரத்து இல்லை. இதையடுத்து மீண்டும் ஆட்டோவுக்கே வந்த அவர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி ஆற்றுக்குப் போகுமாறு கூறினர். ஆட்டோ அங்கு போனது.
ஆனால் அங்கும் தண்ணீர் அதிகம் இல்லை. பாறைதான் தெரிந்தது. இதையடுத்து தண்ணீர் எங்கு அதிகம் இருக்கும், ஆழமாக இருக்கும். அங்கு எங்களைக் கூட்டிக் கொண்டு போயேன் என்று டிரைவர் குருநாதனிடம் கூறினார்கள். அதைக் கேட்ட குருநாதனுக்கு சந்தேகம் தட்டியுள்ளது.
இதையடுத்து முதியவர்களிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்த அவர்களின் எண்ணத்தையும், மனதில் இருந்ததையும் கேட்டறிந்தார் குருநாதன். இரு வயதானவர்களும் தங்களது மன வேதனையை குருநாதனிடம் கூறியபடி வந்தனர். குருநாதன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே நேராக காவல் நிலையம் கூட்டி வந்து விட்டார்.
அங்கு காவல் நிலையத்தில் இருந்தவர்களிடம் முதியவர்களின் பரிதாபக் கதையைக் கூறி ஒப்படைத்தார்.
இதையடுத்து முதியவர்கள் இருவரையும் உட்கார வைத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் அவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அப்போது 85 வயது முதியவர் கூறுகையில், நாமக்கல் துறையூர் சாலையில் லேத் பட்டறை நடத்தி வந்தோம். ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடித்து விட்டோம்.
இப்போது எங்களுக்கு வயதாகி விட்டது. பிள்ளைகளுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவேதான் தற்கொலை செய்ய வந்தோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீஸார், பெரியவரின் மகனுக்குத் தகவல் தெரிவித்த போலீஸார் அவர் வந்ததும் பெற்றோரை இப்படியா அலட்சியமாக பார்த்துக் கொள்வது, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications