ஆவின் பால் கலப்பட வழக்கு– வைத்தியநாதனின் மனைவியைக் கைது செய்ய போலீசார் தீவிரம்
விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதனின் மனைவியையும் கைது செய்வதற்கு போலீசார் அவரை தேடி வருகின்றார்கள்.
ஆவின் பாலில் தண்ணீரைக் கலந்து பால் திருடியதை கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு போலீசார் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இக்கலப்பட மோசடியில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்தியநாதனை கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். அவரை தொடர்ந்து பால்கோவா கம்பெனி உரிமையாளர்கள், பால்பண்ணை மேலாளர் உள்ளிட்ட மேலும் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 18 ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் வைத்தியநாதனின் மனைவி ரேவதிக்கு சொந்தமான தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனமும், ரேவதியும் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் ஆவின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி அப்துல் ரகீம் என்பவரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து வைத்தியநாதனின் மனைவி ரேவதி முன்ஜாமீன் கேட்டு சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரை கைது செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.
தற்போது தலைமறைவாக உள்ள ரேவதியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் 4 முறை ஜாமீன் கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் வைத்தியநாதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 5 ஆவது முறையாக ஜாமீன் கேட்டு வைத்தியநாதன் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி குமார் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications