தமிழகத்தில் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்.. பூஜை பொருட்களின் விற்பனை ஜரூர்!
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை பொருட்களின் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி விழாக்கள் இன்று கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களை வைத்தும் மாணவர்கள் புத்தகங்களை வைத்தும் வழிப்படுவது வழக்கம்.

அதுபோல் அலுவலகங்களிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த நாளில் ஊழியர்களுக்கு பொரி, கடலை, பழங்கள், இனிப்புகள் ஆகியவை வழங்கப்படும். இதற்காக கடந்த ஒரு வாரமாக பொரி மூட்டை கடைகள் ஆங்காங்கே முளைத்துவிட்டன.
[ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகள் செய்ய இன்று நல்ல நேரம் எப்போது தெரியுமா! ]
கல்வியில் சிறந்து விளங்குவதற்காக சரஸ்வதி பூஜையும் தொழில் நன்றாக நடக்க ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதற்காக பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை ஜரூராக உள்ளது. இதன் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் திருஷ்டிக்காக பூசணிக்காய்களும் வந்திறங்கியுள்ளன.
இதை வாங்க மக்கள் ஆங்காங்கே திரண்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது.
நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நாளை எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும் என்பதால் அந்த நாளில் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது, புதிய தொழில் தொடங்குவது, புதிய திரைப்படங்களுக்கு பூஜை போடுவது உள்ளிட்டவை நடைபெறும்.












Click it and Unblock the Notifications