ஆடி கார் வைத்திருக்கிறேனா.. ரோட்டில் படுத்து பிச்சை எடுத்து தின்கிறோம்… அய்யாகண்ணு உருக்கம்
‘நான் ஆடி கார் வைத்திருக்கிறேன் என்று பாஜகவினர் சொல்லி வருகின்றனர். ரோட்டில் படுத்து பிச்சை எடுத்து தின்று வருகிறோம் நாங்கள்’ என அய்யாகண்ணு உருக்கமாகக் கூறியுள்ளார்.
சென்னை: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

100க்கும் மேற்பட்டோர்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 22 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பாஜகவிற்கு கண்டனம்
இந்நிலையில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அய்யாகண்ணு பாஜகவினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை கடுமையாக கண்டித்தார். மேலும் அவர் கூறியதாவது:

பிச்சை
நாங்கள் டெல்லிக்கு வந்து அன்றாடம் பிச்சை எடுத்துதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கான உணவை குருத்வாரில் இருந்து பெற்று உண்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல் அன்பு உள்ளம் கொண்டோரும் எங்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

சாலையில் படுக்கை
நாங்கள் இங்கு வந்த நாளில் இருந்து சாலைகளில்தான் தங்கி இருக்கிறோம். ரோட்டிலேயே படுத்து, தூங்கி, போராடி வருகிறோம். எங்கள் போராட்டம் நிறைவேறும் வரை இப்படித்தான் இருப்போம்.

ஆடி காரா?
எங்களைப் பார்த்தால் ஆடி கார் வைத்திருப்பது போன்றா இருக்கிறது. அப்படி சொல்லி பாஜகவினர் எங்களை அவமானப்படுத்தி வருகின்றனர். எங்களையும் எங்களது போராட்டத்தையும் கொச்சைப்படுத்து பாஜகவினரின் எண்ணம் பலிக்காது என்று அய்யாகண்ணு திட்டவட்டமாகக் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications