For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசிங்கம் வெளியேறி விட்டது.. எஸ்ஸார் கோபி விலகல் குறித்து அழகிரி

Google Oneindia Tamil News

மதுரை: தனது ஆதரவாளர்கள் தன்னை விட்டு விலகியது குறித்து மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். தனது ஸ்டைல் சிரிப்பை சிந்தியபடி இதுகுறித்துக் கருத்துக் கூறிய அழகிரி, வீடும், என்னைச் சுற்றிலும் உள்ள சுற்றுப்புறமும் சுத்தமாகி விட்டது. அசுத்தம் போய் விட்டது என்று கூறியுள்ளார் அழகிரி.

எஸ்ஸார் கோபி உள்ளிட்ட சிலர் அழகிரியை விட்டு இன்று விலகி ஸ்டாலின் பக்கம் போய் விட்டனர். இந்த விலகல் குறித்து அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு தனது டிரேட் மார்க் சிரிப்பை சிந்திய அழகிரி, என் வீடும், என்னைச்சுற்றிலும் சுத்தமாகிவிட்டது; எல்லா அசுத்தமும் போய்விட்டது.

யார் என்னைவிட்டு போனாலும், பரவாயில்லை. எனக்கு ஆதரவாக எப்போதும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை என்னிடமிருந்து பிரிக்க முடியாது என்றும் படு கூலாக தெரிவித்தார் அழகிரி.

English summary
" I am least bothered about somebody's jumping from me. Infact, my house and other surroundings have become neat and clean", said MK Azhagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X