இதெல்லாம் செஞ்சா நான் மன்னிப்பு கேட்கிறேன்... சமரசப் பேச்சுக்கு ஃபுல் ஸ்டாப் போட்ட அழகிரி!
சென்னை: திமுகவில் மீண்டும் மு.க.அழகிரியைச் சேர்க்க அவரது குடும்பத்தினர் பலரும் கடுமையாக முயன்று வரும் நிலையில் திடீரென அழகிரி சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், இதனால் திமுக தலைவர் கருணாநிதி அப்செட் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு திமுகவில் வெடித்த பெரும் குழப்பம் மற்றும் கோஷ்டிப் பூசலில் அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் வசம் கட்சி வந்தது. அவரது தலைமையில் லோக்சபா தேர்தலையும் சந்தித்தது. ஆனால் தேர்தலில் படு தோல்வியை திமுக சந்தித்தது.

இந்தத் தோல்விக்குப் பின்னர் அழகிரியின் முக்கியத்துவம், அவர் மீண்டும் கட்சிக்கு வர வேண்டியதன் அவசியத்தை அவரது குடும்பத்தினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்த ஆரம்பித்தனர். ஸ்டாலினை மட்டும் நம்பியிருந்தால் திமுகவின் நிலை கவலைக்கிடமாகி விடும் என்றும் கருணாநிதிக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கனிமொழியையும் கட்சியில் ஒதுக்கி வைத்து வருவதையும் குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சமரசப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதியிடம் அழகிரி தரப்பில் பேசப்பட்டது. சில பல காரசார விவாதங்களுக்குப் பின்னர் கருணாநிதி,, அழகிரியை மீண்டும் சேர்க்க சம்மதித்து விட்டார்.
மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்து விட்டு சேரலாம் என்று கூறி விட்டார். அப்பாடா இது போதுமே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அழகிரி தரப்பு அவரிடம் போய் இதைச் சொல்ல. சரி அதில் எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறிய அவர் அடுத்து சில நிபந்தனைகளைப் போட்டுள்ளார். இதைச் செய்தால் உடனே நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறி விட்டாராம்.
மீண்டும் தன்னை தென் மண்டல அமைப்புச் செயலாளர் பொறுப்பில் அமர்த்த வேண்டும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்கள் அனைவரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பது அவற்றில் சில.
அதை விட முக்கியானது கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது. இந்த நிபந்தனைகள் குறித்து கருணாநிதியிடம் சமரசம் பேசியவர்கள் போனபோது அப்புறம் பார்க்கலாம் என்று கூறி விட்டாராம். இதனால் இப்போதைக்கு பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், மீண்டும் அழகிரி கட்சிக்குத் திரும்புவது உறுதி. சில பல தடைகள் இருந்தாலும் கூட அதையும் சீக்கிரமே சரி செய்து விடுவோம் என்று குடும்பத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனராம்.
தற்போது கருணாநிதியுடன் நேரடியாக அழகிரியைப் பேச வைக்க தீவிர முயற்சிகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications