ஜெ. தரப்பு கோபம் ஏன்? பாஜகவின் நெருக்கடிகள்.. பி.வி.ஆச்சார்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தம் மீது ஜெயலலிதா தரப்பு ஏன் கோபமாக இருந்து மிரட்டியது என்பது குறித்தும் பாரதிய ஜனதா எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தது என்பது குறித்தும் முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தமது சுயசரிதை புத்தகத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் ஓராண்டு காலம் சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் பி.வி. ஆச்சார்யா. இவர் தமது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இப்புத்தகம் பெங்களூரில் நேற்று வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 'அனுபவங்களையும்' பதிவு செய்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தது. அதில் நான் சிறப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 19.2.2005ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டேன்.
இந்த வழக்கில் நீதிக்காக நான் வாதாடுவதை இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினர். ஆனால், நான் அரசு தரப்பு வழக்கறிஞராக எனது பணியை செய்தபோது, பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தேன்.












Click it and Unblock the Notifications