தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், ஆறாம்பண்ணையில் பக்ரீத் பெருநாள் தொழுகை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், ஆறாம்பண்ணை ஆகிய இடங்களில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்புத் தொழுகை இன்று காலை நடைபெற்றது.

Bakrid prayers held in Seidunganallur, Arampannai

செய்துங்கநல்லூரில் அல்மஸஜிதுன் நூர் பழைய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. இமாம் மின்ஹாஜ் தொழுகை நடத்தினார். அஜாஸ் குப்தா உரையாற்றினார். இந்த தொழுகையில், கரிம்பாஷா, சாதிக், ஆவின் காதர், அப்துல்கனி, ஜாபர், நவாஸ், வஸிமுல்லா, வாஸிம், ஜாபர், ஹரூன், பாசித், ஆதில் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவர் செய்யது இபுராகிம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Bakrid prayers held in Seidunganallur, Arampannai

ஆறாம்பண்ணையில் முகைதீன் பள்ளிவாசல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பீட்டி அப்துல் காதர் தொழுகை நடத்தினார். குபைபு முன்னிலை வகித்தார். ஜாமாத் செயலாளர் முன்னா முகமது, முன்னாள் கவுன்சிலர் முகமது உதுமான், சேக் அப்துல் காதர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாகுல் ஹமீது உட்பட 200க்கும் மேற்பட்டோரும் மற்றும் பெண்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முகைதீன் பள்ளிவாசல் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+