ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள தடையை மதிக்க வேண்டும்: மேனகா காந்தி
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை மதித்து நடக்க வேண்டும் என மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான கடத்தல் தடுப்பு வரைவு மசோதா குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை அறியும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தலைமை தாங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் மேனகா காந்தி கூறியதாவது: பெரும்பாலானோர் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நானோ, பா.ஜ,கவோ அல்லது வேறு யாருமோ சொல்வதற்கு எதுவும் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், உச்சநீதிமன்ற தீர்ப்பை நாம் மதித்து நடக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ள ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா-2016, நாடாளுமன்றத்தில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்னர் குழந்தைகள் கடத்தப்படுவதும், சீரழிக்கப்படுவதும் பெருமளவு குறைந்து விடும்.
இந்த மசோதா தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட வல்லுனர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், பயிற்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சட்ட அமலாக்கல் முகமைகள், கருத்து ஆர்வலர்கள் ஆகியோர்களின் மதிப்புமிக்க கருத்துகளும் பரிசீலிக்கப்படும்.
குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை தடுக்கும் விதத்தில் இ-பாக்ஸ் (மின்னணு பெட்டி) வைக்கும் புதிய முயற்சி, 26-ந் தேதி தொடங்கப்படும். இதன் மூலம் குழந்தைகளை, யாரும் தவறான எண்ணத்துடன் தொடுகிறபோது, அது குறித்து அந்த குழந்தை தனது கம்ப்யூட்டரில் உள்ள இ-பாக்சில் புகார் செய்யலாம். அந்த புகார் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நடைபெறுகிற பாலியல் குற்றங்களை தடுக்கிற நோக்கத்தில், தேசிய அளவில் பாலியல் குற்றவாளிகள் பட்டியலை வெளியிடுவதற்கான வேலைகளை மத்திய உள்துறை அமைச்சகம் செய்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், அது குறித்த பட்டியல் வெளியிடப்படும்.
ஆள்கடத்தலின் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கிய சட்டம் எதுவும் தற்போது இல்லாத நிலையில், கடத்தப்படும் நபர்கள், தொடர்புடைய விவகாரங்களுக்கு எதிராக வலுவான சட்ட, பொருளாதார, சமூக சூழலை உருவாக்குவதுதான் இந்த சட்ட மசோதாவின் முக்கிய நோக்கம். மேலும் பெண்கள், குழந்தைகள் கடத்தலில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க இந்த மசோதா உதவும் என்று கூறினார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications