உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
சென்னை: உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி நினைவு நாள் வரையிலும், அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்துக்கும் பேனர் வைக்கும் கலாசாரம் மேலோங்கி உள்ளது. இதனால் திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்து இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இனி தமிழகத்தில் எங்கும் உயிருடன் உள்ளவர்களுக்கு கட் அவுட் வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட் அவுட்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அந்த தீர்ப்பில் "பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்களை பயன்படுத்த தடை கிடையாது. ஆபாச படங்கள், கருத்துகள் பேனரில் இருக்ககூடாது என்று மட்டும்தான் சட்டத்தில் விதி உள்ளது. எனவே உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்கலாம்'' என்று கூறி இருக்கிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications