உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
சென்னை: உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் பிறந்த நாள், திருமண நாள் தொடங்கி நினைவு நாள் வரையிலும், அரசியல் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என அனைத்துக்கும் பேனர் வைக்கும் கலாசாரம் மேலோங்கி உள்ளது. இதனால் திருலோச்சன சுந்தரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்து இருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இனி தமிழகத்தில் எங்கும் உயிருடன் உள்ளவர்களுக்கு கட் அவுட் வைக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட் அவுட்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அந்த தீர்ப்பில் "பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் படங்களை பயன்படுத்த தடை கிடையாது. ஆபாச படங்கள், கருத்துகள் பேனரில் இருக்ககூடாது என்று மட்டும்தான் சட்டத்தில் விதி உள்ளது. எனவே உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட் வைக்கலாம்'' என்று கூறி இருக்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications