வேலை தருவதாக கூறி பெங்களூர் பெண்ணை ஓசூருக்குக் கூட்டி வந்து பலாத்காரம் செய்த எஸ்.ஐ.
ஓசூர்: வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை ஓசூருக்குக் கூட்டி வந்த பெங்களூர் சப் இன்ஸ்பெக்டர், அங்கு வைத்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதையடுத்து அந்த சப் இன்ஸ்பெக்டரை ஓசூர் போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூர் ஆடுகோடி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சென்ன வீரய்யா. இவருக்கு வயது 58 வயதாகிறது. ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், 31 வயதுப் பெண் ஒருவருக்கு ஓசூரில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார் சென்ன வீரய்யா. அதை நம்பி அந்தப் பெண் சென்ன வீரய்யாவுடன் ஓசூருக்கு வந்தார்.
ஆனால் ஓசூர் வந்ததும் ஒரு லாட்ஜில் ரூம் போட்ட சென்ன வீரய்யா, அங்கு வைத்து அந்தப் பெண்ணை மிரட்டியும், கத்தியைக் காட்டி பயமுறுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டாராம்.
இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து சென்ன வீரய்யாவைப் போலீஸார் கைது செய்தனர்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் போலீஸார்.












Click it and Unblock the Notifications