Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்: தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று கூறி சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்ததார்.

banned smoke in public places,say tn govt

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் வரையறுத்த 8 பொது இடங்களில் புகையிலை விற்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.

கல்வி நிலையங்கள், மருத்துவமனை, ரயில் நிலையங்கள் அருகே புகையிலை விற்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இவ்விகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றி வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவுச் செய்த நீதிபதி கிருபாகரன், அடுத்த 4 வாரங்களில் மாநில சுகாதாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட பிரிவினர், பல்வேறு தொண்டு நிறுவனத்தின் ஆலோசனைகள் மூலம் புகையிலைப் பொருட்களை பொது இடத்தில் பயன்படுத்தாமல் தடுப்பதற்கான விளக்கங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+