For Daily Alerts
Just In
கதம்ப வண்டு கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.. திருவாரூரில் பரபரப்பு
கதண்டு வண்டு கடித்ததால் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர்: கோயிலுக்குச் சென்ற 40 பேரைக் கதம்ப வண்டு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது எருக்காட்டூர் கோயில். இந்தக் கோயிலுக்கு வழிபடப் பக்தர்கள் சென்றுள்ளனர். அங்கு திடீரென கதம்ப வண்டுகள் பக்தர்களை கடித்துள்ளது.
விஷத்தன்மை கொண்ட இந்தக் கதம்ப வண்டுகள் கடித்ததால் 40 பக்தர்களுக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், வலியால் அவர்கள் துடித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Comments
English summary
Forty were admitted in government hospital after beetle bite them.