For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அடிக்கிறா அடிக்கிறா வாய் மேல அடிக்கிறா...' விஜய் டிவியில் ரீ என்ட்ரி கொடுத்த ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியானா அதன் பிறகு முதல் முறையாக விஜய் டிவியின் கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜூலியானா, சிறுவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியான கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜூலியானாவுக்காக டிஆர்பி ரேட் எகிரியது. இதனால் அவருக்கு மக்கள் ஆதரவு பெருகியது.

இந்நிலையில் ஓவியா விவகாரத்தில் பொய் மேல் பொய் சொல்லியும், அவரது சகிக்க முடியாத செயல்பாடுகளுக்காகவும் மக்கள் ஜூலி மீது வெறுப்பை கக்கினர். பொய் பேசியதற்காக கமலிடம் குட்டு வாங்கியும் திருந்தாமல் ஜூலியானா ஓவர் ஆக்ட் செய்தார்.

ஒதுக்கி வைக்கப்பட்ட ஓவியா

ஒதுக்கி வைக்கப்பட்ட ஓவியா

மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஒவியாவுக்கு அவ பெயரை ஏற்படுத்துவதற்காக சக போட்டியாளர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளான ஓவியா, ஆரவ்வு்ம காதலிப்பதாக கூறி விட்டு ஏமாற்றியதால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

வெளியேறினார்

வெளியேறினார்

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து அவராகவே வெளியேறினார். இதனால் சக போட்டியாளர்களான ஜூலி, சக்தி, காயத்ரி ஆகியோர் மனதுக்குள் சிரித்து கொண்டனர். எப்படா சான்ஸ் கிடைக்கும் என்று காத்திருந்த மக்களுக்கு இன்ப செய்தியாக எவிக்ஷன் லிஸ்டில் ஜூலி வந்தார். மக்களால் வெளியேற்றப்பட்டார்.

பரணியை சந்திக்க....

பரணியை சந்திக்க....

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது பரணி சுவர் ஏறி குதித்த போது அவருக்கு உதவாதது ஏன் என்று கேட்டார். இதைத் தொடர்ந்து வெளியேறிய மறுநாளே சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணியை சந்திக்க சென்றார் ஜூலி. முகத்தில் துணி கட்டியவாறே அவர் பொது இடங்களில் சென்று வந்தார்.

முதல் முறையாக...

முதல் முறையாக...

பொது இடங்களுக்கு பயந்து பயந்து சென்று வந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிங் ஆப் காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜூலியானா கலந்து கொண்டார். அவரது புகழ்பெற்ற வசனமான அடிக்கிறா அடிக்கிறா வாய் மேல அடிக்கிறா என்பதை ஒரு சிறிய குழந்தை நடித்து கிண்டல் செய்தது.

திரும்பி வந்துட்டேனு சொல்லு...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புத்தர் முகம் கொண்ட ஆடையை அணிந்து கொண்டு குத்துப்பாட்டுக்கு ஆபாசமாக ஜூலியானா நடனமாடியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சொல்லும் விதமாக கபாலியின் வந்துட்டேன் திரும்பி வந்துட்டேனு சொல்லு என்ற வசனத்தை பேசினார். இதனால் எத்தனை பேர் கடுப்பானார்களோ தெரியவில்லை.

English summary
Bigg boss Juliana participated in the Vijay TV's King of Comedy show after she was evicted from Bigg Boss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X