இந்தியா- வங்கதேச எல்லை வரையறை மசோதா நிறைவேற்றம்: ஜெ., கருணாநிதிக்கு மோடி நன்றி
டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்தியா- வங்கதேசம் எல்லை வரையறை மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் வங்காளதேசமும் எல்லைப்பகுதியில் உள்ள சில பகுதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வகை செய்யும், 119 ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

சபையில் இருந்த 331 உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்து வாக்கு அளித்தனர். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 41 ஆண்டுகளாக இருந்து வந்த எல்லை பிரச்சினை முடிவுக்கு வருவதோடு, 1974 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரவும் வழி பிறந்துள்ளது.
மசோதா நிறைவேறியதும், அதற்கு ஒத்துழைப்பு அளித்ததற்காக சபையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அ.தி.மு.க. உறுப்பினர் பி.வேணுகோபால், சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்), பி.மகதாப் (பிஜு ஜனதாதளம்) ஆகியோரிடம் சென்று பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
மேலும் வங்காளதேசத்தையொட்டி அமைந்துள்ள 5 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், ஒரிசா முதல்வரும், பிஜு ஜனாதாதள தலைவருமான நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மசோதா நிறைவேற ஆதரவு அளித்தமைக்கு நன்றி தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications