பட்டினப்பாக்கத்தில் நாஞ்சில் சம்பத் வீடு முற்றுகை- போலீசில் புகார்
பாஜக தலைவர்களை தொடர்ந்து அவதூறாக பேசுவதாக கூறி நாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவர்களை தொடர்ந்து அவதூறாக பேசுவதாக திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவர் லோகநாதன் அளித்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி அவதூறாக பேசினார் என்பது நாஞ்சில் சம்பத் மீது புகார். இதற்கு தமிழிசையும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டை பாஜகவினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் நாஞ்சில் சம்பத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications