தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும்: பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை
Subscribe to Oneindia Tamil

பெரம்பலூரில் பாரதிய ஜனதாவின் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது, தொகுதி வாரி மாநாடு நடத்துவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில். தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். நிச்சயமாக இது தமிழ்நாட்டில் நடக்கும். நாட்டுக்கு நல்ல தலைமையையும் நல்ல அரசையும் நரேந்திர மோடி தருவார்.
லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். நாட்டில் நிலையான ஆட்சியை பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி அமைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications