கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங். கட்சிகள் செயல்படுகின்றன.. பொன்னையன் குற்றச்சாட்டு
கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகிறது என முன்னால் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சேலம்: கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் செயல்படுகிறது என முன்னால் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்தே பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசுடன் இணக்கமாக மாநில அரசு செயல்பட்டாலும் உரிமையை பெறுவதற்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் பொன்னையன் கூறியுள்ளார்.











Click it and Unblock the Notifications