புதுவை நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக வேட்பாளருக்கு பாஜக திடீர் ஆதரவு!
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக பாஜக திடீரென அறிவித்துள்ளது.
புதுச்சேரி: புதுவை நெல்லித்தொகுதி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தெரிவிப்பதாக பாஜக திடீரென அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இன்று இந்த கூட்டணி முடிவு அறிவிக்கப்பட்டுவிடும் எனவும் பாஜக நம்பி இருந்தது.

ஆனால் பாஜகவை உதறிவிட்டு அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை ஆதரிப்பதாக என்.ஆர். காங்கிரஸ் அறிவித்தது. இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே திடீரென அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை ஆதரிப்பதாக பாரதிய ஜனதா அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில பாஜக பொதுச்செயலர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் ஆகியோர் இதனை அறிவித்தனர்.
மேலும் நெல்லித்தோப்பு காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை தோற்கடிக்கவே இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications