மாணவி நந்தினியை தகாத வார்த்தைகளால் திட்டி பேனர்களை கிழித்த பாஜகவினர்.. காரைக்குடியில் பரபரப்பு
Recommended Video

சிவகங்கை: காரைக்குடியில், மது ஒழிப்பு போராட்ட மாணவி நந்தினிக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து மோசமான வார்த்தைகளை பேசியதால் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மாணவி நந்தினி இன்று காரைக்குடியில் நடத்திய அமைதிவழி பிரச்சார பயணத்தின்போது, பாஜகவினர் தகராறு செய்து, அவர்களின் பேனரை கிழித்து, ஒருமையில் பேசினர்.

செய்தியறிந்து அங்கு கூடிய உள்ளூர் அமைபினர், பாஜகவைக் கண்டித்தும், மாணவி நந்தினிக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.
அப்போது வாக்குவாதம் இரு தரப்புக்கும் ஏற்பட்டது. இதையடுத்து மாணவி நந்தினி, பாஜகவினரின் செயல்பாடு மற்றும் பேச்சை கண்டித்து காரைக்குடி அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மாணவி நந்தினியின் பிரச்சார பதாகையின் வாசகம் சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். அது அவரின் கருத்து சுதந்திரம். அந்த கருத்தில் தவறிருப்பின் காவல்துறையில் புகார் அளிக்கலாமே தவிர, இப்படி மோசமான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் குற்றச்சாட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications