நாங்களும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்: சொல்கிறார் பாஜக தேசிய பொதுச்செயலர் !
ராமநாதபுரம்: தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை நடத்திய மதுரை பிரகடனம் குறித்த விளக்கக் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மது, ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் எதிரொலிக்கும். அதனை முன்னிறுத்திதான் பாஜகாவின் தேர்தல் பிரசாரம் இருக்கும்.

தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும். மதுவால் கிடைக்கும் வருமானத்தில்தான் திமுகவும், அதிமுகவும் தங்களது கட்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. பாமகவும், தேமுதிகவும் இப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கின்றன. மதிமுக பொதுச்செயலர் வைகோ மட்டும் தான் கூட்டணியில் இல்லை எனத் தெரிவித்து வெளியேறி விட்டார்.
பாரதிய ஜனதா கட்சியில் சமூக அக்கரை கொண்ட பல கட்சிகள் இணைய ஆர்வமாக உள்ளன.தமிழக மீனவர்களின் பல ஆண்டு கால பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாற்றுத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என முரளிதர ராவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications