அதிமுகவில் இணைகிறார் நெல்லையில் வாபஸ் பெற்ற பாஜக மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள்?
நெல்லை: நெல்லை மாகராட்சி மேயர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக மனுத் தாக்கல் செய்து கடைசி நேரத்தில் தடாலடியாக வாபஸ் பெற்று அதிமுக வேட்பாளரான புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வாக உதவிய வெள்ளையம்மாள் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல ஆவடி நகராட்சித் தலைவர் தேர்தலில் திடீரென வாபஸ் பெற்ற பாஜக வேட்பாளர் தாரணியும் அதிமுகவுக்குத் தாவுவதாக செய்திகள் கூறுகின்றன.

நெல்லை மேயர் தேர்தலில் போட்டியின்றி தேர்வாகியுள்ள புவனேஸ்வரி இன்று மாலை சென்னை செல்கிறார். அவருடன் பி.எச். பாண்டியன் உள்ளிட்டோரும் செல்கின்றனர். இந்தக் குழுவில் வெள்ளையம்மாளும் இடம் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக குழுவினருடன் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கும் வெள்ளையம்மாள் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றுதான் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தேர்தலி்ல போட்டியிடுதற்காக வாழ்த்து கோரியிருந்தார் வெள்ளையம்மாள். இந்த நிலையில் இன்று அவர் வாபஸ் பெற்று விட்டார். வேறு யாரும் போட்டியில் இல்லாததால் புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications