ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்க வேண்டும்: புதிய நீதிக் கட்சி சண்முகம்
திருவண்ணாமலை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்க வேண்டும் என புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஆரணியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்க வேண்டும். எங்கள் கட்சி தொடர்ந்து பாஜக கூட்டணியில் நீடிக்கும். தமிழக சட்டசபை தேர்தலில் தாமரை சின்னத்தில் நாங்கள் போட்டியிட உள்ளோம்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினோம். மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார்.
ஓராண்டு காலத்தில் மோடி சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். அவர் பல வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள இந்தியர்களை சந்தித்து வருகிறார். மேலும் அங்குள்ள தொழில் அதிபர்களை இந்தியாவில் வந்து தொழில் செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். வெளிநாட்டு தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் செய்தால் ஏராளமான இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும்.
பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருவதால் இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியா கூடுதல் வளர்ச்சி அடையும். மோடி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் லஞ்சம் ஒழிந்துள்ளது. வேறு எந்த பிரதமரும் மோடி போன்று செயல்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications