பாஜகவின் முக்கிய நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது.. யார் இந்த அலெக்ஸிஸ் சுதாகர்? பரபர பின்னணி
செங்கல்பட்டு: பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த 28 ம் தேதி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய வழக்கில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41). இவர் பிரபல ரவுடியாக உள்ளார். இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழிப்பறி திருட்டு பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தான் சீர்காழி சத்யா பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் சீர்காழி சத்யாவை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடைய கூட்டாளிகளான மாரிமுத்து, பால்பாண்டி ஆகியோரும் சிக்கினர். இதையடுத்து அவர்களின் கார், வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீர்காழி சத்யா வைத்திருந்த கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், பட்டா கத்தி உள்ளிட்டவை சிக்கின. இதையடுத்து கைத்துப்பாக்கி பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கைத்துப்பாக்கியை பாஜகவை சேர்ந்த நிர்வாகி சீர்காழி சத்யாவிற்கு கொடுத்தது தெரியவந்தது. அதாவது பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இருப்பவர் அலெக்ஸிஸ் சுதாகர். இவர் தான் சீர்காழி சத்யாவிற்கு துப்பாக்கியை சட்டவிரோதமாக வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக நிர்வாகியான அலெக்ஸிஸ் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தான் தற்போது அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது அலெக்ஸிஸ் சுதாகர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு எஸ்பி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை செங்கல்பட்டு கலெக்டர் ஏற்றார். இதையடுத்து அலெக்ஸிஸ் சுதாகரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதன்மூலம் பாஜக நிர்வாகி அலெக்ஸிஸ் சுதாகருக்கு ஓராண்டு ஜாமீன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications