தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என அதிமுக எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்களை அதிமுக, திமுக, அதிமுக அம்மா அணி ஆகியவை அறிவித்துள்ளன.

ஆர்கே நகர் தொகு வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அதிமுக எம்பியான மைத்ரேயன் இன்று சென்னை தண்டையார்பேட்டையில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனனை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவால் என்றார். ஆர்.கே. நகர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் உதவி தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை என்றும் அவர் கூறினார். ஆர்.கே.நகரில் பாஜகவுக்கு வாக்கு வங்கி இல்லை என்றும் மைத்ரேயன் எம்பி தெரிவித்தார்.ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் வெற்றி நிச்சயிக்கப்பட்டது என்றும் மைத்ரேயன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications