Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரிக்கடலில் கடல் சீற்றம் அதிகரிப்பால் படகுப் போக்குவரத்து நிறுத்தம்- சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

குமரி: கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பாலும், சூறைக்காற்றாலும் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடலில் சூறைக்காற்று வீசியது. அதோடு கடலின் நீர் மட்டத்திலும் மாற்றம் காணப்பட்டது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம் போல விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கி நடந்து கொண்டிருந்தது. திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பகல் 10.30 மணிக்கு கடலில் மீண்டும் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி விவேகானந்தர் பாறைக்கு நடந்து வந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே பாறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுற்றுலா பயணிகளும் அவசர அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். கடல் சீற்றம் தணிந்த பிறகே படகு போக்குவரத்து நடக்கும் என அதிகாரிகள் அறிவிப்பு பலகை தொங்க விட்டனர்.

இதனால் படகு சவாரிக்கு காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கன்னியாகுமரியில் இன்று காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கடல் சீற்றம் காரணமாக அவர்கள் திரிவேணி சங்கமம் மற்றும் சன்செட் பாயிண்ட் பகுதிகளில் கடலின் அருகே செல்லாமல் தொலைவில் இருந்தே பார்த்து விட்டு திரும்பினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+