விஜயகாந்த் பேச்சு டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில் "வெடி குண்டு"… ஒருவர் கைது

அரசு டாஸ்மாக் கிடங்குக்கு வந்த சரக்கு லாரியில் மதுபாட்டில்களோடு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: அரசு மதுபான கிடங்கிற்கு சென்ற லாரியில் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சென்னை எண்ணூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் விளமல் பகுதியில் அரசு மதுபான கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் இறக்குவதற்காக லாரியில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. சரக்கை இறக்கிக் கொண்டிருந்த போது லாரியில் வெடிகுண்டு இருப்பதை பணியாளர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Bomb found in TASMAC lorry

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியுடன் வந்த மோகன் மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்ர். வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பிச் சென்றுவிட்டார்.

அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை எண்ணூர் பர்மா காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+