திருச்சியில் 5 இடங்களில் குண்டுவெடிக்கும்: கலெக்டருக்கு இ-மெயில் மூலம் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் ஐந்து இடங்களில் குண்டுவெடிக்கும் என அம்மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு மர்மநபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு நேற்று ஒரு இ-மெயில் வந்துள்ளது. அதில் திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரி, வணிக வளாகம் உள்ளிட்ட 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என வந்துள்ளது.

இதையடுத்து கலெக்டர் பழனிசாமி மாவட்ட கண்காணிப்பாளர் சஞ்சாய் மாத்தூருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பது தெரியவில்லை. எந்த பகுதியில் இருந்து இ-மெயில் வந்தது என்பதும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications