கோவை விமான நிலையத்தை தகர்ப்போம்.. வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
கோவை விமான நிலையத்தை தகர்க்கப்போவதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
கோவை: கோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் குடியரசுத் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி நாடு முழுவதும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விமான நிலையங்கள் முழுவதும் 5 அடக்கு பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்தன.

தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விமானங்களில் பார்சல்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலைய இயக்குநருக்கு மர்ம நபர் அனுப்பிய கடிதத்தில், கோவை விமான நிலையத்தை தகர்க்கப்போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications