"இன்று மாலை வரும் ரயிலில் குண்டு வெடிக்கும்" - சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை வரும் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரும் ரயிலில் குண்டு வெடிக்கும் என்று ரயில்வே காவல் கட்டுப்பாடு அறைக்கு ஒரு தகவல் வந்தது.

இரண்டு பேர் பேசிக் கொண்டதை கேட்டு சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் இந்த தகவலை கொடுத்துள்ளார். இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் சோதனையில் ஈடுபட்டனர். சென்ட்ரல் வரும் ரயில்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில் குண்டு வெடித்து ஒரு பெண் பலியானார். பலர் காயமடைந்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications