ராமநாதபுரம்: பள்ளிகளை மூடவைத்த வெடிகுண்டு மிரட்டல்
ராமநாதபுரம்: கீழக்கரையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது.
ராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை நகரசபை பெண் தலைவரான ரட்டியா துல் கத்தாரியா என்பவருக்கு இன்று காலை ஒரு மர்மக் கடிதம் வந்தது.
அவரது கணவர் அதை பிரித்து, படித்துப் பார்த்தபோது, கீழக்கரை பகுதிக்குட்பட்ட 5 பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், சரியாக இன்று காலை 11.18 மணிக்கு அந்த குண்டுகள் வெடித்துச் சிதறும் என்றும், முடிந்தால் அந்தப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கீழக்கரை பகுதிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மோப்ப நாய்களுடன் விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழு அத்தனை பள்ளிகளையும் முழுமையாக சோதனை மேற்கொண்டனர்.
இதனையடுத்து எந்த பள்ளியிலும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை என வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்ததை மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications