For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் கைது

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 2 இன்ஜினியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இன்ஜினியர்கள்- வீடியோ

    சென்னை: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 கம்ப்யூட்டர் இன்ஜினியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    Bomb threat to the Chennai airport 2 computer engineer arrested

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக வெடி குண்டு நிபுணர்கள் விமான நிலையத்திற்கு விரைந்து சோதனை மேற்கொண்டனர்.

    இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த சில நாட்களிலேயே விமான நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்தனர்.

    அவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    Bomb threat to the Chennai airport's 2 computer engineer, was arrested by the police police inquires to them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X