50 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்... பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க தயார்!
சென்னை: தமிழகத்தில் பள்ளி திறக்கும் முதல் நாளில் 50 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப் பட உள்ளது.
தமிழகத்தில் 40 ஆயிரம் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், 10 ஆயிரம் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1ம் தேதி திறக்கப் பட உள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலவச பாடப்புத்தகங்கள்...
அதன்படி, இந்தாண்டு 1 முதல் 9 வகுப்புவரை படிக்கும் 45 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. 52 லட்சம் பேருக்கு நோட்டு புத்தகங்களும் வழங்க தயாராக உள்ளன. 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 30 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்பாடு...
பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அரசு வழங்கும் பாடப்புத்தகம், நோட்டு புத்தகங்கள் மாணவர்கள் கையில் கிடைக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முழுமையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

குடோனில் இருந்து...
அதன்படி, அனைத்து மாவட்டத்திற்கும் பாடப் புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள், சீருடைகள் அனுப்பப்பட்டன. அதனை குடோனில் இருந்து பள்ளிக்குத் தலைமை ஆசிரியர்கள் எடுத்துச் சென்று வருகின்றனர்.

மேற்பார்வையில்...
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.சபீதா மற்றும் இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications