பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடமும் பாலிட்டிக்ஸ்.. மதுரையில் தேர்தல் அலுவலர் மாற்றம்
மதுரை: பார்வையற்ற மாற்றுதிறனாளியின் விருப்பத்திற்கு மாறாக வேறு சின்னத்தில் வாக்களிக்க செய்த தேர்தல் அலுவலர் பணியில் இருந்து மாற்றப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மத்திய சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள, வீரமாமுனிவர் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் அலுவலராக பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார் வசுந்தரா தேவி.

இந்நிலையில், பார்வையற்ற மாற்று திறனாளி ஒருவர் இன்று இந்த வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க வந்தபோது, அவர் குறிப்பிட்ட சின்னத்தை தவிர்த்து, வேறு ஒரு சின்னத்தில் வாக்களிக்க செய்துள்ளார் வசுந்தரா தேவி.
இந்த தகவல் தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகளுக்கு பறந்தது. இதையடுத்து வசுந்தராதேவியை தேர்தல் பணியில் இருந்து விலக்கிக்கொண்ட தேர்தல் ஆணையம், அவருக்கு பதிலாக, ராஜமுத்துவை நியமித்துள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளியடமும் பாலிட்டிக்சா.. என மனம் வெதும்புகிறார்கள் மக்கள்.












Click it and Unblock the Notifications