சேலையில் தூளி கட்டி ஆடிய சிறுவன் – கழுத்து இறுக்கி பரிதாப பலி!

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் சேலையில் தூளி கட்டி ஆடிய சிறுவன், சேலை கழுத்தை இறுக்கியதில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சின்னபாண்டி என்பவர். அவரது 9 வயதான மகன் வேல்பாண்டி 4ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று சின்னபாண்டி வீட்டில் சேலையால் துாளி கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை சின்னபாண்டியின் கழுத்தில் சிக்கியது. கழுத்து இறுகிய நிலையில் துடித்துக் கொண்டிருந்த அவனை யாரும் பார்க்கவில்லை.

சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது சின்னபாண்டி இறந்து நிலையில் கிடந்துள்ளான். இதையடுத்து ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுவன் இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்த பின்னர் சின்னபாண்டி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கன்னியப்பபிள்ளைபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+