லஞ்சம் வாங்குவது இழிவு..புகார் வந்தால் கடும் நடவடிக்கை...மின்வாரியம் வார்னிங்..ஷாக் ஆன ஊழியர்கள்
சென்னை:மின் சேவை இணைப்பு வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சேவை இணைப்புகளை வழங்க லஞ்சம் வாங்குவது வழக்கமாக உள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழ் பெற சென்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. நேர்மையான அதிகாரிகள் விதிவிலக்காக உள்ளனர். மின்சார வாரியம், வருவாய்துறை உள்ளிட்ட பல அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டாலும் அவ்வப்போது சம்மந்தப்பட்ட துறை சார்ந்த மேலிடம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொலைக்காட்சிகள், ஊடகங்களில் புகைப்படத்துடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றிய செய்தி வெளியானாலும் லஞ்சம் பெறுவது குறையவே இல்லை.
அந்த வகையில் தற்போது, சேவை இணைப்புகளை வழங்குவதற்கு அதிகாரிகளும், ஊழியர்களும் லஞ்சம் கோருவதும், வாங்குவதும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரையடுத்து, இத்தகைய இழிவான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டால் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, வழக்குகள் குறித்து எழுத்துப்பூர்வமாக ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளை விசாரிக்க விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications