Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் விபரீதம் - திருமண மண்டபத்திலேயே மயங்கி விழுந்து மணமகள் மரணம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் திருமணத்தின் போது, மண்டபத்திலேயே பெண் மயக்கமுற்று இறந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி நகர் அல்லிநகரம் அருகே குறிஞ்சி நகரில் குடியிருப்பவர் ஈஸ்வரன். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.அவரது 3 ஆவது மகள் ஜோதிராணிக்கும் , அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டனுக்கும் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

நேற்று காலை 8.30 மணி அளவில் மண்டபத்தில் திருமணத்திற்காக மணப்பெண் ஜோதிராணியை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஜோதிராணி மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் இவரை தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஜோதிராணி முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஜோதிராணியின் தந்தை ஈஸ்வரன் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+