வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலியால் பரபரப்பு
நெல்லை: சுதந்திரப் போராட்ட தியாகியாகப் போற்றப்படும் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலி செலுத்தி இருப்பது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் என்ற இளைஞரால் 1911ஆம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதே இடத்தில் வாஞ்சிநாதனும் தம்மைத் தாமே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கொடுங்கோலராக ஆஷ்துரையும் சுதந்திரப் போராட்ட தியாகியாக வாஞ்சிநாதனும் போற்றப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் வாஞ்சிநாதன் நினைவுநாளில் அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
ஆனால் ஆய்வாளர்களோ, மனிதர்களிடையே நிலவிய ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைக் களையத்தான் ஆஷ்துரை பாடுபட்டார்; தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையை தகர்த்தவர் ஆஷ்துரை என பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வாஞ்சிநாதன், நாட்டு விடுதலைக்காக அந்த தாக்குதலை நடத்தவில்லை; இந்துக்களின் சனாதான தர்மத்தை; ஜாதிய வேறுபாடுகளை களைவதற்காக பாடுபட்டார் என்ற காரணத்தாலேயே ஆஷ்துரையை சுட்டுக் கொன்றார்; இதற்கு வாஞ்சிநாதன் எழுதி வைத்த கடிதமே சாட்சி என்றும் கூறுகின்றனர்.
இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று வாஞ்சிநாதனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் ஆஷ்துரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications