வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலியால் பரபரப்பு
நெல்லை: சுதந்திரப் போராட்ட தியாகியாகப் போற்றப்படும் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ஆஷ்துரை நினைவிடத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் அஞ்சலி செலுத்தி இருப்பது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் என்ற இளைஞரால் 1911ஆம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதே இடத்தில் வாஞ்சிநாதனும் தம்மைத் தாமே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் கொடுங்கோலராக ஆஷ்துரையும் சுதந்திரப் போராட்ட தியாகியாக வாஞ்சிநாதனும் போற்றப்பட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் வாஞ்சிநாதன் நினைவுநாளில் அவரது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.
ஆனால் ஆய்வாளர்களோ, மனிதர்களிடையே நிலவிய ஜாதிய ஏற்றத் தாழ்வுகளைக் களையத்தான் ஆஷ்துரை பாடுபட்டார்; தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையை தகர்த்தவர் ஆஷ்துரை என பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வாஞ்சிநாதன், நாட்டு விடுதலைக்காக அந்த தாக்குதலை நடத்தவில்லை; இந்துக்களின் சனாதான தர்மத்தை; ஜாதிய வேறுபாடுகளை களைவதற்காக பாடுபட்டார் என்ற காரணத்தாலேயே ஆஷ்துரையை சுட்டுக் கொன்றார்; இதற்கு வாஞ்சிநாதன் எழுதி வைத்த கடிதமே சாட்சி என்றும் கூறுகின்றனர்.
இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்று வாஞ்சிநாதனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆதித் தமிழர் கட்சியினர் ஆஷ்துரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதனால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications