சென்னையில் போலீஸ் அதிரடி சோதனை: விபச்சார அழகிகள் கைது
சென்னை: சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பு, ஓட்டல்களில் விபசாரம் நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி கொல்கத்தா, புனேயை சேர்ந்த அழகிகளை கைது செய்தனர்.
சென்னை, தியாகராயநகர், கோபால கிருஷ்ணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் அந்த இடத்தை மாறு வேடத்தில் கண்காணித்தனர். அப்போது குடியிருப்பில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த விபசார புரோக்கர்களான தியாகராயநகரை சேர்ந்த சிவபிரசாத், ராயப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் விபசாரத்தில் ஈடுபட இருந்த சென்னையை சேர்ந்த 2 அழகிகளை மீட்டனர். இதேபோல் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் தியாகராயநகரை சேர்ந்த முகமது நவ்ஷாத்தை கைது செய்த போலீசார் புனேயை சேர்ந்த அழகியை மீட்டனர்.
பல்லாவரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர் பம்மலை சேர்ந்த அப்துல் ரகுமானை போலீசார் பிடித்தனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த அழகியையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications