தருமபுரியில் சரக்கோடு கோழிப் பண்ணை மருந்தை கலந்து குடித்த சகோதரர்கள் பரிதாப பலி!
தருமபுரி: தருமபுரியில் சரக்கோடு தண்ணீருக்கு பதிலாக மருந்தை கலந்து குடித்த சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் வெங்கடாசலம் 75 வயதானவர். இவர் கோழிப் பண்ணை நடத்தி வந்தார். இவரது தம்பி 55 வயதான ராஜா. இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு மதுகுடித்துள்ளனர்.

அப்போது, மதுவில் கலப்பதற்கு தண்ணீருக்குப் பதிலாக, கோழிப் பண்ணையில் பயன்படுத்தக்கூடிய ஒருவகை மருந்தைக் கலந்து இருவரும் குடித்துள்ளனர். இதில் மயக்கமடைந்து கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், உயர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெங்கடாசலம், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெங்கடாசலத்தின் மனைவி சரோஜா என்பவர் அளித்த புகாரின் பேரில் அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications