ஐயா, ஏட்... ஐ..! தமிழக போலீசுக்கான பி.எஸ்.என்.எல் செல்போன் சேவை திடீர் முடக்கம்
சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புகள் திடீரென்று செயல் இழந்ததால் பணிகள் ஸ்தம்பித்தன.
அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்(பி.எஸ்.என்.எல்) நிறுவனமானது பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கான செல்போன் இணைப்புகளையும், தொலைபேசி இணைப்புகளையும் வழங்கி வருகின்றது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தமிழக காவல்துறையினருக்கு வழக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகள் மற்றும் இணைய சேவையானது திடீரென்று செயலிழந்து போயுள்ளது.
இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளனர். அவர்களும் இத்திடீர் துண்டிப்பின் காரணத்தைக் கண்டறிய முயன்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதுமான அனைத்து காவலர்களுக்கும் ஏற்பட்டுள்ளதால், மற்ற காவல்நிலையங்களைத் தொடர்பு கொள்ள இயலாமல் தவித்து வருகின்றனர் காவல்துறையினர்.












Click it and Unblock the Notifications