பல்புக்குள் ஜெ., ஓவியம் வரைந்த கோவை இளைஞர்... டுவிட்டரில் டிரெண்ட்
கோவை: கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை குண்டு பல்புக்குள் வரைந்துள்ளார். ஜெயலலிதா பற்றிய செய்திகள் தற்போது டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கப்பட்டு வருகின்றன.
CM Jayalalithaa is the first chief minister in India to announce 100 units free electricity for public.Thanks #Amma pic.twitter.com/zoGBWonGS7
— Venky (@vengi123) June 13, 2016
ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றவுடன், 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனை வரவேற்கும் விதமாக கோவையைச் சேர்ந்த யூ.எம்.டிராஜா என்பவர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை மின்விளக்கிற்குள் ஓவியமாக வரைந்திருக்கிறார். அதில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கியதற்கு நன்றி என்றும் அவர் எழுதியுள்ளார்.
இதனிடையே CM Jayalalitha என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் ஜெயலலிதா பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடியை நாளை டெல்லியில் ஜெயலலிதா சந்திக்கப் போவது பற்றியும், பல்பு ஓவியம் பற்றிய செய்தியும் பகிரப்பட்டு வருகின்றன.