திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு-40 பேர் படுகாயம்
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு-40 பேர் படுகாயம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ளது கண்டரமாணிக்கம் கிராமம். இங்குள்ள மிகவும் பிரச்சித்தி பெற்ற கோயிலான மாணிக்க நாச்சியம்மன் கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்வர்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான விழாவில் நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 260 காளைகள் பங்கேற்க வைக்கப்பட்டன. அதேபோல ஏராளமான இளைஞர்கள் இதில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருந்தனர். விழா தொடங்கியதும், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.
அப்போது சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 40 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த சேவற்கொடியான், ஒடுவம்பட்டியை சேர்ந்த பெரியசாமி ஆகியோர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications