வேட்டையாடிடுவேன் பாத்துக்கோ... புல்லட் நாகராஜன் மீண்டும் அட்டகாசம்... பெண் இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்
Recommended Video

பெரியகுளம்: எங்கள் ஆட்கள் மீது நடவடிக்கை எடுத்தால் வேட்டையாடுவேன் என புல்லட் நாகராஜன் மற்றொரு பெண் போலீஸ் அதிகாரிக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன.
இவரது அண்ணன் 2006-இல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நாகராஜனின் அண்ணன்
இந்நிலையில் சிறைச்சாலையில் உடல் பரிசோதனை செய்ய வந்த டாக்டரிடம் தனக்கு தூக்க மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்ததால் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பெண் மருத்துவர் மீது வீசினார். இதையறிந்த மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா காவலர்களை அனுப்பி நாகராஜனின் அண்ணனை அடித்துள்ளனர்.

மிரட்டல்
இதனிடையே அவர் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை எஸ்பி ஊர்மிளா அடித்து துவைத்ததை தம்பியிடம் கூறி பொங்கியுள்ளார். இதையடுத்து எஸ்பி ஊர்மிளாவுக்கு போனை போட்ட புல்லட் நாகராஜன், பெண் அதிகாரியிடம் மிரட்டல் விடுத்து பேசியுள்ளார்.

பெண் அதிகாரிக்கு மிரட்டல்
அதிகாரியை எரித்து கொன்றது ஞாபகம் இருக்கிறதா, உங்கள் மேல் லாரி ஏறும் என அடுத்தடுத்து மிரட்டல் விடுத்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பெண் அதிகாரியை புல்லட் நாகராஜன் மிரட்டியுள்ளார்.

ஆள் மேல் கை வச்சா
பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் போன் செய்துள்ளார் புல்லட் நாகராஜன். அப்போது அவர் பேசுகையில் இனி யாரையும் அடிக்கக் கூடாது. எங்கள் ஆள் மேல் கை வைத்தால் வேட்டையாடுவேன். யாரையும் கைது செய்து சட்டவிரோதமாக லாட்ஜில் வைத்து அடிக்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

பரபரப்பு
போலீஸாருக்கே பெரும் சவாலாக உள்ள புல்லட் நாகராஜனை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுரை, பெரியகுளம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மிரட்டல் ஆடியோ வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications