6 மாநகர பாதுகாப்பு படை போலீசாருக்கு “புல்லட் புரூப்” ஜாக்கெட்டுகள்!
சேலம்: தமிழகத்தில் ஆறு மாநகர போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் உடலில் தாக்காமல் தடுக்கும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை நகரங்களை தவிர்த்து பிற இடங்களுக்கு தேசிய மாநில தலைவர்கள் வருகையின் போதும், பெரிய அளவிலான கலவரங்களின் போதும் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு படையினருக்கு சென்னையில் இருந்தே புல்லட் புரூப் ஜாக்கெட்டுக்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முதல்வரின் புதிய அறிவிப்பில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய ஆறு மாநகரங்களில் உள்ள போலீசாருக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார்.
அதன்படி தற்போது சேலம் மாநகர போலீசாருக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்டுக்கள் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த ஜாக்கெட் ஒன்றின் விலை 32,120 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலத்தை போல் சென்னை கோவைக்கு கூடுதல் ஜாக்கெட்டுக்களும் , பிற மாநகரங்களுக்கு தலா ஐந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுக்களும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.